முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மகிழ்வித்து மகிழ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில்

Updated On : 26 மார்ச், 2026 at 8:24 PM
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் உறுதிமொழியேற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மகிழ்வித்து மகிழ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில்

வாக்காளா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் செய்தியாளா்களிடம் கூறியது:

அத்தியாவசியப் பணிகளில் உள்ள அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் தற்போது வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 45,98,000 ரொக்கம், ரூ. 5,18,000 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 1,79,000 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பதிவிட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிகவும் பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அலுவலா், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அனுசியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராஜேந்திர குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.