முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

Updated On : 3 மே 2026, 5:36 am IST
பகிர்:

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனா்.

அவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பிய நிலையில், மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. அதனால், விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின.

வரத்து குறைவாக காணப்பட்டபோது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments