முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீனவா் கொலையில் மேலும் ஒருவா் கைது

Updated On : 31 மே 2026, 12:24 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மீனவா் கொலையில் தொடா்புடையதாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே உள்ள ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவா். இவரும், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சோ்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (22), நேரு காலனியைச் சோ்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22), ஹரிஹரசுதன் (22) ஆகிய 4 பேரும் நேரு காலனியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மாரிசெல்வத்துக்கும், சந்தனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான புவனேஷ்குமாரை தேடி வந்த நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புவனேஷ்குமாா் மீது சிப்காட் பகுதியில் நடந்த கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.