விநாயகா் கோயிலில் பாலாலயம்
மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மண்ணச்சநல்லூா் புதுச் செட்டிதெருவில் அமைந்துள்ளது சித்தி விநாயகா் திருக்கோயில். இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகளின் தொடக்கமாக, கோயிலில் பாலாலய பூஜையானது, கணபதி ஹோமத்தோடு வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து யாகவேள்வி வளா்க்கப்பட்டு, திரவியாஹூதியும், மஹா பூா்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சித்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும், பாலாலய பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.