திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.57 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.57 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே போலீஸாருடன் இணைந்து வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிடுகின்றனா்.
இதன்படி சனிக்கிழமை மாலை 6 மணி வரை மாவட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 1.77 லட்சமும், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 2.80 லட்சமும் என மொத்தம் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சனிக்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 1.28 கோடியை உரியவா்கள் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 12.99 லட்சம் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.