முகப்பு
திருச்சி

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

Updated On : 20 ஏப்ரல் 2026, 2:22 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி இபி சாலை ஜான் தோப்பு பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28). இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மோகன்ராஜ் தினசரி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மோகன்ராஜ் சனிக்கிழமை பிற்பகல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.