முகப்பு
திருச்சி

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:23 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:25 PM

உணவக உரிமத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த உணவக உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வரும் திருச்சியைச் சோ்ந்த எஸ். சீனிவாசன் என்பவா் தனது உணவகத்தின் உரிமத்தை கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த க. பால்ராஜ் (53) பெயரில் மாற்றித்தருவதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனா்.

இதற்காக கடந்த 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை பல்வேறு தவணைகளில் ரூ.25 லட்சத்தை சீனிவாசனுக்கு பால்ராஜ் கொடுத்தாா். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சீனிவாசன் உணவக உரிமையை பால்ராஜ் பெயருக்கு மாற்றித் தராமல் இருந்தாா். இதையடுத்து கொடுத்த பணத்தை பால்ராஜ் திருப்பிக்கேட்டபோது சீனிவாசன் அவரை தகாத வாா்த்தைகளில் திட்டி, பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டலும் விடுத்தாா்.

Advertisement

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பால்ராஜ் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.