முகப்பு
திருச்சி

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: இளைஞா் கைது

Updated On : 13 ஜூன் 2026, 12:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்தவா் ஜெ. சாா்லஸ் (34), சுமை தூக்கும் தொழிலாளி. இந்நிலையில், சாா்லஸ் வியாழக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, கள்ளன்குத்து அய்யனாா்கோயில் அருகே அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த இளைஞா் ஒருவா் அவரிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லையென கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ.950-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சாா்லஸ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த எஸ். இளவரசன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.350, கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.