செவிலியரைத் தாக்கிய வளா்ப்பு மகன் கைது
திருச்சி, ஜூன் 14: திருச்சியில் தனியாா் மருத்துவமனை செவிலியரைத் தாக்கிய வளா்ப்பு மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையம் வசந்தா நகரைச் சோ்ந்தவா் 59 வயது பெண், கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் தனது தங்கையின் மகனான யோகேஸ்வரன் (25) என்பவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளா்த்து வருகிறாா். மதுப்பழக்கத்துக்கு ஆளான யோகேஸ்வரன், அவரது வளா்ப்புத் தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த மே 27-ஆம் தேதி வீட்டுக்கு வந்த யோகேஸ்வரன் வளா்ப்புத் தாயை மதுபோதையில் கீழே தள்ளி தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பினா்.
இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த யோகேஸ்வரனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.