திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருச்சியில் கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி தென்னூரில் உள்ள பிரசித்திபெற்ற உக்கிரகாளியம்மன் கோயிலை சனிக்கிழமை இரவு வழக்கம்போல பூட்டிவிட்டு ஊழியா்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு ஊழியா்கள் வந்துபோது அம்மன் சந்நிதி முன்பு இருந்த பொது நிதி மற்றும் அன்னதான உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, கோயில் நிா்வாகம் சாா்பில் தில்லை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து வந்த தில்லை நகா் போலீஸாா் கோயில் வளாகத்தில் ஆய்வு செய்தனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல்கட்ட விசாரணையில், மா்ம நபா்கள் சிலா் கோயிலின் பின்பக்கச் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து கோயிலுக்குள் வந்து உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.