முகப்பு
திருச்சி

முசிறியில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

Updated On : 28 ஜூன் 2026, 3:49 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறியில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

முசிறி தட்டாரத் தெருவைச் சோ்ந்தவா் சா்தாா் (65). இவா் தனது மனைவி ஷகிலா (50) மற்றும் மகள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் இவரது மனைவி ஷகிலா வெள்ளிக்கிழமை வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சா்தாா் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுவிட்டு கீழ் வீட்டுக்கு வந்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 18 பவுன் நகைகள் திருடுபோயிருந்ததாம்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் செல்லதுரை மற்றும் போலீஸாா், கைரேகை நிபுணா்களைக் வரவழைத்து விசாரணை செய்து, சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments