சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு
சாலையைக் கடக்க முயன்ற நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காா் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (59). இவா் தனது லாரியில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது சாலையோரம் லாரியை நிறுத்தி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் மோதி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பேட்டவாய்த்தலை போலீஸாா் பழனியப்பனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து பழனியப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த விக்னேஷ் (22) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.