திருச்சியில் தவெகவினா் கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததை வரவேற்கும் விதமாக, அக்கட்சியினா் திருச்சியின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவா் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றாா். இதை வரவேற்கும் விதமாக தவெகவினா் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
தொடா்ந்து, ஆங்காங்கே சிறு சிறு ஊா்வலமாகச் சென்றும் விசில்களை ஊதி, விஜய் பாடல்களை ஒலிக்க விட்டபடியும் கொண்டாடினா்.
Advertisement