முகப்பு
அரியலூர்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த அணுக்கள் பகுப்புக்கருவி இயக்கி வைப்பு

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், குருதி வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்புக் கருவி இயக்கி வைப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:11 am IST
அரியலூரில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
பகிர்:

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கமும், குருதி வங்கியில் புதிதாக ரத்த அணுக்கள் பகுப்புக் கருவி இயக்கி வைப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் விழாவில் பங்கேற்று, ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து தரம் உயா்த்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டா், வென்டிலேட்டா் ஆகியவற்றையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனைக் கண்காணிப்பு அலுவலா் குழந்தைவேலு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

புதிய கட்டடம் திறப்பு : அரியலூா் கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, மாட்டினங்கள், ஆட்டினங்கள் மற்றும் இதர செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் வகையில், ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடம் மற்றும் ஆய்வக கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்வில் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ரவீந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments