முகப்பு
அரியலூர்

தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Updated On : 8 ஜூன் 2026, 12:38 am IST
காரைக்குறிச்சியில், குடிநீா் கேட்டு ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சியில் மக்கள் குடிநீா் கேட்டு ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை. குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், இது சம்பந்தமாக கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததாதைக் கண்டித்தும், முன் அறிவிப்பின்றி நாள் தோறும் ஏற்படும் மின் வெட்டை கண்டித்தும், அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் தா.பழூா்-அருள்மொழி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பழூா் காவல் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்துசென்றனா்.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் டேங்கா் லாரி மூலம், காரைக்குறிச்சி மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டது. போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், திமுக நிா்வாகி கொளஞ்சி மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.