புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை உரிமையாளா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மீன்சுருட்டி அருகே வடவாா் தலைப்பில் உள்ள மளிகைக் கடைகளில், மீன்சுருட்டி காவல் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வடவாா் தலைப்பை சோ்ந்த சாகுல் ஹமீது (33), ஜலாலுதீன் (28) ஆகியோா் தங்கள் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 21 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement