கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் சுப்ரமணியன்சுவாமி உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் சுப்ரமணியன்சுவாமி உருவப்படத்தை எரித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அவதூறு பேசியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியைக் கண்டித்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்டத் தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் சாதிக் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சுப்ரமணியன்சுவாமியின் உருவப்படத்தை எரித்து கண்டனக்குரல் எழுப்பினர். இதில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சிவசாமி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.