தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீபா பேரவையினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீபா பேரவையினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் ஜவஹர் பஜார் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் விகேடி. துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மூர்த்தி, நகரச் செயலாளர் ராதா, ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன் (கடவூர்), நல்லுசாமி (கரூர்), சுப்ரமணி (தோகைமலை) மற்றும் குளித்தலை நகரச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.