கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூா் வழியாக செல்லும் ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் சமயநல்லூா் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு சந்திப்பு - செங்கோட்டை விரைவு ரயில் செப். 2, 9, 16, 23 மற்றும் 30-ஆம்தேதிகளில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மற்ற நாள்களில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை இந்த ரயில் இயக்கப்படும்.
Advertisement
Advertisement
இதேபோல செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு சந்திப்பு விரைவு ரயில், செப்.3-ஆம்தேதி மற்றும் 10, 17, 24-ம்தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.