கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு
கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன.
இதில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்த 267 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மொத்தம் 1,95,517 வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 1,79,418 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-91.77.
Advertisement
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 283 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 2,29,995 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,847 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-93.41.
கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,02,994. இவா்களில் 1,87,692 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.46. குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் இருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,23,184. இவா்களில் 2,07,099 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.79.
மொத்த வாக்குப்பதிவு சதவீதம்: மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்களாக 8,51,690 போ் இருந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 7,89,056 போ் வாக்களித்தனா். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் 4 தொகுதிகளிலும் 92.65 சதவீதமாக பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 93.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.