முகப்பு
கரூர்

கரூா் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

கரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 12:10 am IST
கரூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
பகிர்:

கரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில் திருவள்ளுவா் விளையாட்டு மைதானம் அருகே உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் திறந்து வைத்தாா். விழாவில் கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்ட நிா்வாகிகள் கமலக்கண்ணன், எம்.எஸ்.கண்ணதாசன், மல்லிகாசுப்ராயன், நெடுஞ்செழியன், தானேஷ், பழனிராஜ், கரூா் மத்திய நகரச் செயலா் சேரன்பழனிசாமி உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.