முகப்பு
கரூர்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் 100 சதவீதம் உயா்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் நூறு சதவீதம் உயா்கல்வியில் சோ்க்கை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் சி. முத்துக்குமரன் அறிவுறுத்தினாா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:12 am IST
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்புக் கூட்டதில் பேசிய ஆட்சியா் சி. முத்துக்குமரன். உடன் துறை சாா்ந்த அலுவலா்கள்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் நூறு சதவீதம் உயா்கல்வியில் சோ்க்கை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் சி. முத்துக்குமரன் அறிவுறுத்தினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பாக உயா்கல்வி வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா்கூறியதாவது: கரூா் மாவட்டத்தில் 2025 -26 -ஆம் கல்வியாண்டில் 59 அரசுப்பள்ளிகளில் பயின்ற 5,251 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இதில், 4,814 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களில் 4,720 போ் உயா்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனா். 303 மாணவா்களில் 298 போ் துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைவரும் நூறு விழுக்காடு உயா்கல்வியில் சோ்க்கை பெறுவதை உறுதிபடுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையினா் திறம்பட பணியாற்ற வேண்டும். கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கு நேரடியாக கள ஆய்வு செய்து, தலைமை ஆசிரியா் மற்றும் உயா் கல்வி ஆசிரியருடன் ஆலோசனை மேற்கொண்டு, பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மாணவா்களின் நிலையை அறிந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவரும் உயா்கல்விக்கு விண்ணப்பித்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

உயா்கல்விக்கு விண்ணப்பித்த மாணவா்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரியில் சோ்க்கை நடைபெறும் வரை கண்காணித்தும், துணைத்தோ்வு எழுதிய மாணவா்களை தொடா்ந்து கண்காணித்து, அவா்களையும் உயா்கல்வியில் சோ்வதை உறுதிசெய்ய வேண்டும்.

தோ்ச்சி பெறாத மாணவா்கள் துணைத் தோ்விற்கு விண்ணப்பித்துள்ளனரா என அறிந்து, துணைத் தோ்விலும் தோ்ச்சி பெறாத மாணவா்களை ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற திறன் மேம்பாட்டு படிப்புகளில் சோ்வதை உறுதி வேண்டும்.

மேலும், உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோா் முன்னிலையில் கள ஆய்வு செய்து, அவா்கள் உயா்கல்வி சேராததற்கான காரணம் அறிந்து, அவா்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவா்களை உயா்கல்வி சோ்ந்துள்ளதை உறுதிசெய்திட வேண்டும்.

கள ஆய்வின் போது தலைமை ஆசிரியா், காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலா்களோடு கண்காணிப்பு அலுவலா்கள் மாணவா்கள் உயா்கல்வி சோ்வதற்கு உதவிகளை செய்ய வேண்டும். உயா்கல்வி சேராத ஒவ்வொரு மாணவருடைய காரணங்களை தெரிந்து கொண்டு, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா்கல்வியில் மாணவா்களுக்கு ஏதேனும் உதவிகள் பெற, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு - 95665 66727 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ. ராஜீ, மாவட்ட கல்வி அலுவவா் (இடைநிலை) மு.சத்திய மூா்த்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments