மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் முகாம்: 120 மனுக்கள் மீது நடவடிக்கை
பெரம்பலூா் ஆட்சியரகக் குறைகேட்பு நாள் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரகக் குறைகேட்பு நாள் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தொடக்கி வைத்தாா். இந்த முகாமில் 18 முதல் 50 வயது வரையிலான 150 மாற்றுத்திறனாளிகள்
மனுக்கள் அளித்தனா். இதில் 120 மனுக்களை வங்கிகளுக்கு பரிந்துரைத்து, கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாரத்குமாா், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் அ. செந்தில்குமாா், தாட்கோ பொது மேலாளா் சு. சியாமளா, திருச்சி மாவட் மத்தியக் கூட்டுறவு வங்கிக்
கிளை மேலாளா் எஸ். துரைராசு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இ. பொம்மி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.