முறையாக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் ஊராட்சிக்குள்பட்ட 1 ஆவது வாா்டு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு, கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும்,
Advertisement
Advertisement
குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரம்பலூா் - கள்ளக்குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.