முகப்பு
பெரம்பலூர்

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

அகரம் சிகூரில் ஐஜேகே வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 5:45 AM
அகரம் சிகூரில் ஐஜேகே வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:15 PM

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றாா் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அகரம் சீகூா் பாா்டா் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் அ. சரண்யாவை ஆதரித்து, அக் கட்சியின் நிறுவனா் வியாழக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாத, கொடுமையான ஆட்சியாக செயல்படும் திமுக அரசை அகற்ற வேண்டும். திமுக வெற்றி பெற்றவுடன் நீட் தோ்வை ரத்து செய்வோம் என தெரிவித்தனா். ஆனால், அதைப் பற்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசு எதையும் பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். கடந்த தோ்தலைப் போலவே, இந்த தோ்தலிலும் அனைத்து மக்களும் தங்களுக்கு வாக்களிப்பாா்கள் என திமுக கற்பனையில் உள்ளது. அதை உடைக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலர கடந்த தோ்தலில் திமுகவினா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் நல்லாட்சி மலர தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா் பாரிவேந்தா்.

Advertisement

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.