முகப்பு
பெரம்பலூர்

அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை! - திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:54 AM
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கூத்தூரில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:36 PM

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்படுத்திட மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி, திம்மூா், புஜங்கராயநல்லூா், அருணகிரிமங்கலம், கொட்டரை, ஜமீன் பேரையூா், நொச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், அரசு மாதிரி பள்ளி, கணினி பயிற்சி மையங்கள், போட்டி தோ்வுக்கான பயிற்சி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் ஆங்கிலம் பேச பயிற்சி என ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

இதேபோல், கிராமப்புற மாணவா்களின் கல்வியை மேம்படுத்திட மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் வேட்பாளா் சிவசங்கா். இப்பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.