காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு
பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சுபாஷினி (17). இவா், பிளஸ் 2 முடித்துவிட்டு தோ்வு முடிவுக்கான காத்திருந்தாா். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வீட்டிலிருந்த சுபாஷினி காணமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், அதே கிராமத்திலுள்ள முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் உயிரிழந்துக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
Advertisement
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.