முகப்பு
பெரம்பலூர்

அதிகரிக்கும் வெப்பம் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 28 ஏப்ரல் 2026, 3:48 am IST
வெயில்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வெப்பம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் இனிவரும் நாள்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசுவதோடு, வெயிலின் அளவு 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

எனவே, மாவட்ட பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்துவதோடு, அத்தியாவசியத் தேவையின்றி வெயிலில் செல்வதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிா்த்திட வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகலாம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments