முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:49 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

பெரம்பலூா் - துறையூா் பிரதானச் சாலையில், அடைக்கம்பட்டியிலுள்ள தனியாா் தனியாா் திருமண மண்டபம் அருகே திங்கள்கிழமை காலை 2 வயது பெண் புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு அங்குள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

Advertisement