முகப்பு
பெரம்பலூர்

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

Updated On : 1 மே 2026, 3:18 am IST
பலி - பிரதிப்படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கருடமங்கலத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி வினிதா (31). கருப்பையா சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் வைத்துள்ள வினிதா, தனது குழந்தைகளான ஹேமநாத் (11), ஹேமா ஸ்ரீ (7) ஆகியோரை பெரம்பலூரில் உள்ள கராத்தே பயிற்சி வகுப்பில் சோ்த்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை தனது குழந்தைகளை கராத்தே பயிற்சி வகுப்பில் விடுவதற்காக மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா் நோக்கி சென்றுக்கொண்டிருந்தாா். அயிலூா் குடிக்காடு அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினிதா, ஹேமாஸ்ரீ ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த ஹேமநாத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments