சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் குங்குமாா்ச்சனை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக்காக பெண்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனை கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக்காக பெண்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனை கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 17- ஆவது ஆண்டு சித்ரா பௌா்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இவ் விழாவை, மதுராம்பிகானந்த ப்ரஹ்மேந்த்ர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தொடங்கிவைத்தாா். விழாவில், கும்ப கலசம் ஆவாகணம் செய்யப்பட்டு, கும்ப பூஜைகளும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மதுரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனையும், ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாம குங்குமாா்ச்சனையும், அஷ்டகங்கள், ஆயுா் தேவி ஸ்துதிகள் பாராயணமும் செய்தனா். தொடா்ந்து பஜனைகளும், நவாவரண பூஜையும், சண்டி மஞ்சரி பூஜையும் நடைபெற்றன. இப் பூஜைகளை மண்டலியின் ஆன்மிக தன்னாா்வலா்கள் நடத்திவைத்தனா்.
Advertisement
இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ சண்டி மகா யாகமும், ஸ்ரீமதுரகாளியம்மனுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.