முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:19 am IST
வழக்கு
பகிர்:

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், மேற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன் (38). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், பெருமாள் கோயில் தெருவில் மருந்தகம் நடத்திவருகிறாா்.

10-ஆம் வகுப்பு வரை படித்ததாக கூறப்படும் மணிகண்டன், தனது மருந்தகத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், பெரம்பலூா் ஊரக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் போலி மருத்துவா் என தெரியவந்தது. தொடா்ந்து, இணை இயக்குநா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனா்.