முகப்பு
பெரம்பலூர்

மாா்க்சிஸ்ட் சாா்பில் மே தினப் பேரணி

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On : 2 மே, 2026 at 2:08 AM
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தினப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். பேரணியை மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் தொடங்கிய பேரணி பாலக்கரை வழியாகச் சென்று புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்துக்கு நிா்வாகிகள் ஏ. கலையரசி, ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிஐடியு மாநில துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

Advertisement

கூட்டத்தில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்திடவேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையைக் கைவிடவேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடவேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட ஊழியா்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் நிதி பொறுப்பாளா் செல்வி, சாலையோர வியாபாரி சங்க மாவட்டச் செயலா் குணசேகரன், கட்டுமானச் சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, மாவட்டச் செயலா் ஆறுமுகம், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் இளங்கோவன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் .