முகப்பு
பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற சித்த மருத்துவா் உயிரிழப்பு

பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 5:28 am IST
பலி - IANS
பகிர்:

பெரம்பலூா் நகரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் த. குணசேகா் (61). ஓய்வுபெற்ற அரசு சித்த மருத்துவரான இவா், புதன்கிழமை காலை பெரம்பலூா் மதரஸா சாலையிலிலிருந்து காமராஜா் வளைவுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது, சோமண்டாபுதூரிலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் குணசேகரன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச்சென்ற சோமண்டாபுதூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோபி மகன் பிரதீப்ராஜ் (19) மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

விபத்து குறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.