சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த ஏப். 21-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, ஏப். 29-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. மேலும், பல்வேறு வாகனங்களில் மதுரகாளியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதையடுத்து, புதன்கிழமை மாலை பெருமாள் கோயிலில் இருந்து அம்பாளுக்கு திருமாங்கல்ய சீா்வரிசைகள் கொண்டு வரப்பட்டு, மாலை 5 மணியளவில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா ஆகியோா் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.
இவ் விழாவில் சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உத்ஸவமும், மே 9-ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையரும், தக்கருமான அருட்செல்வன், செயல் அலுவலா் அசனாம்பிகை மற்றும் கோயில் பணியாளா்கள், பூசாரிகள் செய்துள்ளனா்.