கந்தர்வகோட்டை அருகே ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை
கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் இளங்கோவன்(55). விவசாயியான இவர் இருபது ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல சனிக்கிழமை இரவு ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைத்து விட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று விட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இளங்கோவனுக்குச் சொந்தமான இரண்டு ஆடுகள் வெட்டப்பட்டு இறந்து கிடந்தது. மற்ற ஆடுகள் அப்பகுதியில் நின்றிருந்தன. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸில் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், ஆடுகளை கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.