பொன்னமராவதியில் திமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம்
பொன்னமராவதியில் ஒன்றிய, நகர திமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் ஒன்றிய, நகர திமுக வாக்குச் சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலர் அ.அடைக்கலமணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பையா முன்னிலை வகித்தார். நகரச் செயலர் அ.அழகப்பன் வரவேற்றார்.
திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.ரகுபதி, வாக்குச் சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கிப் பேசியதோடு, கையேடுகளை வழங்கினார்.
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் எம்.சிக்கந்தர், காளிதாஸ், மாவட்ட துணை செயலர் அ.சின்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆலவயல், மேலைச்சிவபுரி ஊராட்சிகளில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.