மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மண்டலப் பயிற்சி முகாம் தொடக்கம்
திருமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்களுக்கான மூன்று நாள் மண்டலப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்களுக்கான மூன்று நாள் மண்டலப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
முதல்நாள் பயிற்சி முகாமிற்கு கட்சி நிர்வாகி அருணோதயன் தலைமை வகித்தார். முகாமின் நோக்கங்கள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் பேசினர்.
முகாமில், புதுகை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150க்கும் அதிகமான ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.