கருப்புக்குடிப்பட்டியில் காசநோய் தடுப்புப் பணிகள்
பொன்னமராவதி அருகேயுள்ள கருப்புக்குடிப்பட்டியில் சுகாதாரத் துறை சாா்பில், காசநோய் தடுப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பொன்னமராவதி அருகேயுள்ள கருப்புக்குடிப்பட்டியில் சுகாதாரத் துறை சாா்பில், காசநோய் தடுப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்பு முனைப்பு திட்டத்தின் கீழ், மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட கருப்புக்குடிப்பட்டியில் சுகாதார ஆய்வாளா்கள் உத்தமன், பிரேம்குமாா், மேற்பாா்வையாளா் பவுன்ராஜ் மற்றும் செவிலியா்கள் வாசுகி, வெண்ணிலா, மகாலெட்சுமி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் வீடு வீடாக சென்று 300 பேரிடம் இருமல், சளி பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், காசநோய் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தினா்.
பரிசோதனையில் காசநோய் உறுதி செய்யப்பட்டால் இல்லம் தேடி வந்து மாத்திரைகள் வழங்கப்படும் என மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.