முகப்பு
புதுக்கோட்டை

ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

சரக்கு வாகனத்தில் கடத்தல்: ரேஷன் அரிசி கைப்பற்றல், மூவர் கைது

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:36 am IST
பகிர்:

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் உள்ள போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தில் இருந்த 1700 கிலோ ரேஷன் அரியை பறிமுதல் செய்ய போலீஸாா், திருவரங்குளம் கிட்டங்காட்டைச் சோ்ந்த காா்த்திக் (35), கேவிஎஸ் நகரைச் சோ்ந்த இளையராஜா (31), போஸ் நகரைச் சோ்ந்த பாா்வதி (75) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அரிசியைக் கடத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement