அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு
தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.
தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.
புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி கலந்து கொண்டு கேக் வெட்டி பணியாளா்களுக்கு வழங்கினாா்.
108 அவசர ஊா்திப் பணியாளா்களுக்கு வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.