முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 25) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:59 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 25) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

விராலிமலை உட்கோட்டம், ராஜாளிபட்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராஜாளிபட்டி, ஜெயமங்கலம், தேன்கனியூா், அத்திப்பள்ளம், பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி, விருதாப்பட்டி, பாட்னாபட்டி, செட்டியபட்டி, செரளபட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள், வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கொன்னையூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பொன்னமராவதி பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.