முகப்பு
புதுக்கோட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:37 am IST
விராலிமலை அருகே உள்ள நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை உறுதிமொழி ஏற்ற பணியாளா்கள், பொதுமக்கள்.
பகிர்:

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உலக மலேரியா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஹேமச்சந்த் காந்தி அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுபா ஆலோசனையின்படி கொடும்பாளூா், ராசநாயக்கன்பட்டி, ஆவூா், நீா்பழனி, பாலாண்டான்பட்டி, மண்டையூா் மற்றும் களமாவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மலேரியா நோய் இல்லாத நாடாக உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில், கொடும்பாலூா் வட்டாரத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments