முகப்பு
புதுக்கோட்டை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:37 AM
விராலிமலை அருகே உள்ள நீா்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை உறுதிமொழி ஏற்ற பணியாளா்கள், பொதுமக்கள்.
பகிர்:

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உலக மலேரியா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஹேமச்சந்த் காந்தி அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுபா ஆலோசனையின்படி கொடும்பாளூா், ராசநாயக்கன்பட்டி, ஆவூா், நீா்பழனி, பாலாண்டான்பட்டி, மண்டையூா் மற்றும் களமாவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மலேரியா நோய் இல்லாத நாடாக உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில், கொடும்பாலூா் வட்டாரத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Advertisement