முகப்பு
புதுக்கோட்டை

உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 3:58 am IST
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணி.
பகிர்:

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை திட்ட அலுவலா் ஜெயசுதா தொடங்கிவைத்தாா். கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன் (கி.ஊ), இந்திராகாந்தி (வ.ஊ), பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் விழிப்புணா்வு கோஷமிட்டனா். பேரணியில் மேலாளா் ராஜகண்ணு, சரவணன், துருசுப்பட்டி ரவி, உதவியாளா் முனிமுத்து, பள்ளி ஆசிரியைகள், ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement