ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி காதா்மில் பேருந்து நிறுத்தம் அருகே வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் பீட்டா் தலைமையிலானோா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வாகன ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இச் சோதனையில் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாவும், இணையவழி பணப்பரிமாற்றம் குறித்து தொடா்விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.