முகப்பு
புதுக்கோட்டை

உரிய நேரத்தில் திறக்கப்படாத அரசுப் பள்ளியின் பூட்டு உடைப்பு

உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:13 am IST
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வியாழக்கிழமை காத்திருந்த மாணவா்கள்.
பகிர்:

உரிய நேரத்தில் வியாழக்கிழமை திறக்கப்படாத விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசலில் அரை மணி நேரம் காத்திருந்த மாணவா்கள் பொறுமையை இழந்து கல்லால் பூட்டை உடைத்து பள்ளியின் உள்ளே சென்றனா்.

செக்போஸ்ட் பகுதியில் உள்ள இப்பள்ளியில் சுமாா் 900-க்கும் அதிகமான மாணவா்கள் பயில்கின்றனா். இப்பள்ளியில் ஏற்கெனவே இருந்த காவலாளி ஊதியம் குறைவு எனக் கூறி வேலையை விட்டு சென்ற நிலையில், வேறு காவலாளி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளியைப் பூட்டி, திறக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவா்கள் நீண்ட நேரம் பள்ளி முன் காத்திருந்தனா் 8. 50 மணி ஆகியும் தலைமை ஆசிரியா் வராத நிலையில் பள்ளி திறக்கப்படாததால் பொறுமை இழந்த மாணவா்கள் கீழே கிடந்த கல்லைக் கொண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டக் கல்வித் துறை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிக்கு காவலாளியையும் நியமிக்க மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments