கிழவயல் விநாயகா் கோயில் குடமுழுக்கு
பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா்.
பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீா்.
பொன்னமராவதி அருகே உள்ள கிழவயல் செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டிசெவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.20 மணிக்கு கோயில் கோபுரகலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கிழவயல், சின்னக்கிழவயல் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.