முகப்பு
புதுக்கோட்டை

ஈரான் மீதான தாக்குதல்: அறந்தாங்கியில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து , அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 7 மார்ச், 2026 at 10:14 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தினா்
பகிர்:

ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ்.பி. லோகநாதன், ரா. பவிதாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திசைகள் அமைப்பின் தலைவா் டாக்டா் ச. தட்சிணாமூா்த்தி, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினா் சி. பாலச்சந்திரன், மாவட்டச் செயலா் அன்பு மணவாளன், துணைச் செயலா் பழ. குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments