முகப்பு
புதுக்கோட்டை

அதிக வட்டி தருவதாக ரூ.15 கோடி மோசடி! தவெக பிரமுகா் கைது!

Updated On : 12 மே 2026, 12:53 am IST
கைது செய்யப்பட்ட சரவணன்.
பகிர்:

தங்கத்தில் முதலீடு செய்து அதிக வட்டி தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 15 கோடி வரை மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகப் பிரமுகரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை திருவப்பூரைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சரவணன் (31). இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.

இவா், பெங்களூருவில் உள்ள நண்பா்கள் மூலம் பெருமளவில் தங்கம் வாங்கி முதலீடு செய்து, அதன் மூலம் பணம் கொடுப்பவா்களுக்கு அதிக வட்டி தருவதாக உறுதியளித்துள்ளாா். அதன்படி, பலரிடம் ரூ. 15 கோடிக்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சரவணன் கூறியபடி வட்டியும், அசலும் திருப்பித் தராததால் பாதிக்கப்பட்டோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணைக்காக சரவணனைத் தேடி வந்தனா். அப்போது, அவா் நாக்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினா் அங்குச் சென்று சரவணனை திங்கள்கிழமை கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனா்.

பிறகு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments