அரிமளம் பகுதிகளில் இன்று மின்தடை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சனிக்கிழமை (மே 30) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்து செய்திக் குறிப்பு: திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (மே 30) அவசரக் காலப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப் பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement